கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையின் ஜனாதிபதி விருது

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையின் ஜனாதிபதி விருது (2015/2016) கண்டி பொல்கொல்லையில் இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன கௌரவ விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதி அமைச்சர் சம்பிகா பிரேமதாஷ மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பேரவையின் தலைவி ஹேஷானி போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர், அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றினர்.