அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்களின் வட மாகாணத்திற்கான களப்பயணம் இன்று..

 

பி.எம்.எம்.ஏ.காதர்

 

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இன்று (26-02-2017) வட மாகாணத்திற்கான களப்பயணமோன்றை மேற்கொள்கின்றனர். சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் அதிகாலை இந்தப் பயணம் அக்கரைப்பற்றில் இருந்து ஆரம்பமாகின்றது.

திருகோணமலை வழியாக யாழ்பாணம்,முல்லைத்தீவு,மன்னார் உட்பட அனைத்துப் பிரதேசங்களுக்கும் இந்தக் களப்பயணம் தொடரும் என சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்களும் இடம்பெறுவதுடன் அங்கு வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் கண்டறியப்படவுள்ளது.