சாம்பூர் மக்களின் 386 ஏக்கர் காணிகளை உரியவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி அனுமதி!

அபு அலா 

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம்  சாம்பூர் மக்களின் பிரச்சனைகளை கண்டறிய கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று புதன்கிழமை மாலை (20) அங்கு நேரில் சென்றுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இச்சந்திப்பில், சாம்பூர் மக்களின் 386 ஏக்கர் காணிகள் உரியவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைக்குஜனாதிபதி அனுமதியளித்ததனை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அம்மக்களிடம் நினைவு படுத்தினார். 

மேலும், ஜனாதிபதி சிறுபான்மை மக்கள் விடயத்தில் கருசனையாக இருக்கிறார் எனவே சில விடயங்களில்நாம் அமைதிகாத்து நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று அங்கு இடம்பெற்றகலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் பலவருடங்களாக பிரச்சனைகள், ஏழ்மை நிலையினை எதிர்கொண்ட சாம்பூர்மக்களின் காணிகள் கடந்த அரசினால் சுவிகரிக்கப்பட்டமை, அதன் பின்னர் புதிய ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன அதனை மீட்டுக் மக்களிடம் கொடுக்க கையொப்பமிட்டமையின் பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் அதனை வாபஸ் பெற்று உரியவர்களிடம் காணிகளை வழங்கவேண்டும் என்ற விடயத்தை முன்வைத்து கிளிவெட்டி யைச்சேர்ந்த தேவராஜா பிரேம் குமார் என்பவர்உண்ணாவிரதம் இருந்தமை தொடர்பிலும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுமக்களின் தேவைகளைக் கேட்டரிந்தனர்.

DSC_1618_Fotor_Collage_Fotor