போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாட் கேட்டறிவு

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில்  ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வு தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும்  கலந்துரையாடினார்.

மேலும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.