சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னரே பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் !

Unknow_Fotorசுயா­தீன ஆணைக்­குழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டதன் பின்­னரே எதிர்­வரும் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் விஜி­த­ ஹேரத் தெரி­வித்தார்.

புதிய தேர்தல் முறைமை தொடர்­பி­லான கட்­சி­களின் நிலைப்­பாடு, முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் தொடர்­பிலும் கருத்து தெரி­வித்­தார்.

பெல­வத்தை மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கட்சி அலு­வ­ல­கத்தில் இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

எதிர் வரும் செப்­டெம்பர் மாதத்­திற்கு முன்­பாக தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்­பதில் பிர­தமர், ஜனா­தி­பதி ஆகியோர் உறு­தி­யாக இருப்­ப­தாக தெரி­கி­றது. அதனால் செப்­டெம்பர் மாதத்­திற்கு முதல் தேர்தல் நடத்­த­ப்ப­டு­மாயின் அது சுயா­தீன ஆணைக்­குழு உரு­வாக்­கப்­பட்­டதன் பின்பே இடம்­பெற வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு. 19 ஆவது திருத்தம் எதிர்­பார்த்த பலனை தரா­வி­டினும் சிறிது நன்மை பயக்கும் கார­ணி­க­ளுடன் நிறை­வேற்றப் பட்­டுள்­ளது.

அதனால் தேர்தல் முறை­யிலும் விரைவில் மாற்றம் செய்ய வேண்­டிய அவ­சியம் உள்­ளது. தற்­போ­துள்ள தேர்தல் முறை­மைக்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு போதும் ஆத­ரவு வழங்­காது. மாறாக புதிய முறை உரு­வாக்­கப்­ப­டு­மாயின் அதனில் ஜனநா­யகம் பாதிக்­க­ாவண்ணம் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

புதிய முறையில் கட்­சிக்கு ஒரு வாக்கு சீட்டு வேட்­பா­ள­ருக்கு வாக்கு சீட்டு என்ற வகையில் இருக்­கு­மாயின் புதிய தேர்தல் முறைமை சிறந்­த­தாக அமையும் என எதிர்­பார்க்­கிறோம்.
எவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதி தலை­மையில் நேற்றுமுன்தினம் தேர்தல் முறை தொடர்­பி­லான கலந்­து­ரை­யாடல் ஒன்று இடம் பெற்­றுள்­ளது. இதனால் தேர்தல் முறை குறித்த சரி­யான முடி­வொன்று இது வரையில் எடுக்­கப்­ப­ட­வில்லை என அறிய முடி­கி­றது.

சிறு கட்­சி­க­ளி­டை­யேயும் தேர்தல் முறை தொடர்­பி­லான இறுதி முடி­வொன்று எட்­டப்­ப­ட­வில்லை. முள்ளி­வாய்க்கால் பகு­தியில் இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது உயி­ரி­ழந்த தமது உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தி­யமை தொடர்பில் அச்­சப்­படத் தேவை­யில்லை. முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் உயி­ரிழந்த சொந்­த­ங்­க­ளுக்­கா­கவே அப்­பி­ர­தேச மக்­களால் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது