உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரராக ரொனால்டோ தெரிவு

உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரராக ரொனால்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையினால் முதல் தடவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பீபா விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த வீரராக போர்த்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் பெலுன் டீ ஓர் என்னும் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வந்துள்ள நிலையில் கால்பந்தாட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் இனி பீபா விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்றைய தினம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் ஆண்டுக்கான சிறந்த கால் பந்தாட்ட வீரர் விருதினை ரொனால்டோ பெற்றுக் கொண்டார். சிறந்த பெண் கால்பந்தாட்ட வீராங்கனை என்ற விருது அமெரிக்காவின் காலி லொயிட் பெற்றுக் கொண்டார்.