உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்படும் :பிரதமர்

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குறித்த குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது நாளொன்றை ஒதுக்கித் தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் இன்று(27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,

ஆணைக்குழுவின் அறிக்கை பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் ஆணைக்குழு பேச்சு நடத்த வேண்டும்.

இதற்கமைய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் கட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வின் போது இதற்காக நாளொன்றை ஒதுக்கித்தருவதாக இந்த குழுவிடம் பிரதமர் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.