முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகும் : அமைச்சர் ரிஷாட்

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவுநாட்டிற்குப் பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன்அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இடதுசாரிச் சிந்தனையைக் கொண்ட முன்னாள் பிரதமர்ரட்னஸ்ரீ விக்ரமநாயகதனது அரசியல் வாழ்வை லங்கா சமசமாஜக் கட்சியின் மூலம் தொடங்கினார்.

பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் ட்சியின் கொள்கைகளில்ஈர்க்கப்பட்டமையினால் அக்கட்சியில் இணைந்துகொண்டார்அமரர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் அரசியல்வாழ்வில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்மிகமுக்கிய அமைச்சுக்களான பெருந் தோட்டத்துறைபொதுநிர்வாகம் ஆகியவற்றை இவர் பொறுபபேற்றிருந்தகாலங்கட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களினதும்அரசேவையாளர்களினதும் நலன்களுக்கா காத்திரமானதிட்டங்களை முன்னெடுத்தவர்.

ஐக்கிய இராச்சியத்தில் இவர் கற்கின்ற காலத்தில் இலங்கைமாணவர்களின் தலைவராக பணியாற்றி இலங்கை தொடர்பில்பிறநாட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திளவர்.

காலஞ்சென்ற ரட்னஸ்ரீ விக்ரமநாயக பிரதமராக பதவியேற்றகாலத்தில் விவசாயிகளுக்கு அதியுச்ச நண்மைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்

பத்திரிகைத் துறையில் மிகுந்த டுபாடுகொண்ட அன்னார்ஊடகவியலாளர்களையும்கலைஞர்களையும்கலாவிற்பன்னர்களையும் தட்டிக்கொடுக்கக் கூடியவராகஇருந்ததோடு அவர்களின் பணிகளைப் பாராட்டிகௌரவித்துமுள்ளார்.

அவரது வாரிசான விதுர விக்ரமராஜ நாயக தந்தையின் வழியில்இன்று அரசியல் நடத்தி வருகின்றார்.

காலம் சென்ற முன்னாள் பிரதமரின் இழப்பினால் துயருறும்அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கின்றேன்.