ஜனா­தி­ப­தியின் தலை­மையில் தொல்­பொருள் வர­லாற்றுப் பிர­தே­சங்­களைப் பாது­காப்­பது தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்

தற்­போது பாதிப்­புக்­குள்­ளா­கி­யி­ருக்கும் மற்றும் பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் தொல்­பொருள் வர­லாற்றுப் பிர­தே­சங்­களைப் பாது­காப்­ப­தற்கு உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் தொல்­பொருள் பிர­தே­சங்­களின் வர­லாறு பற்றி மாண­வர்­களைத் தெளி வூட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­ப­டியும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறிவுறுத்தியுள்ளார். 

எதிர்­வரும் ஜன­வரி 24 ஆம் திக­திக்கு முதல் இது தொடர்­பான அறிக்­கை­யொன்­றினை தனக்கு சமர்ப்­பிக்கும் படியும் வேண்­டி­யுள்ளார்.

அண்­மையில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் அவ­ரது தலை­மையில் நடை­பெற்ற தொல்­பொருள் வர­லாற்றுப் பிர­தே­சங்­களைப் பாது­காப்­பது தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரி­விக்­கையில்;
வர­லாற்றுப் புகழ்­மிக்க தொல்­பொருள் பிர­தே­சங்­களின் பிரச்­சி­னைகள் இன்று நேற்று ஆரம்­பித்­த­வை­யல்ல. கடந்த காலங்­க­ளிலும் பல பிரச்­சி­னைகள் இருந்­தன. தொல்­பொருள் திணைக்­க­ளத்தில் மனித வளப் பற்­றாக்­கு­றையே கார­ண­மாகும். இந்­நி­லையில் தற்­போது பிரச்­சி­னைகள் உள்ள தொல்­பொருள் பிர­தே­சங்கள் இனங்­கா­ணப்­பட்டு பாது­காக்­கப்­பட வேண்டும்.

தொல்­பொருள் பிர­தே­சங்­களில் வடக்கு கிழக்கில் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்கு பாது­காப்பு அமைச்சு, நீதி­ய­மைச்சு, பௌத்த சாசன அமைச்சு, கலா­சார அமைச்சு, தொல்­பொருள் திணைக்­களம் என்­ப­ன­வற்றின் அதி­கா­ரிகள் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

தொல்­பொருள் பிர­தே­சங்­களின் வர­லாறு அவற்றின் பெறு­மதி பற்றி பாட­சாலை மாண­வர்கள் அறி­யா­துள்­ளனர். எனவே பாட­சாலை மாண­வர்கள் மாத்­தி­ர­மின்றி நாட்டு மக்­களும் தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி தெரி­வித்­த­துடன் அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் படியும் அதி­கா­ரி­களை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ
கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்ட நீதி­ய­மைச்­சரும் புத்­த­சா­சன அமைச்­ச­ரு­மான விஜே­தாஸ ராஜபக் ஷ கருத்து தெரி­விக்­கையில்;
அண்­மையில் நான் செங்­க­ல­டிக்கு விஜயம் செய்தேன். அங்கு பௌத்த கோபுர பிர­தே­ச­மொன்று முஸ்லிம் ஒரு­வ­ரினால் சட்­ட­வி­ரோ­த­மாக கையா­ளப்­பட்டு காணி உறுதி எழு­தப்­பட்டு தமிழர் ஒரு­வ­ருக்கு விற்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் காணியை கொள்­வ­னவு செய்த  தமிழர் டோசர் பண்­ணி­யுள்ளார்.

இதனால் பௌத்த கோபுரம் அழிக்­கப்­பட்­டுள்­ளது. கோபு­ரத்தின் அரை­வாசி டோசர் பண்­ணப்­பட்­டுள்­ளது. கோபு­ரத்­துக்கு நடு­விலே வேலியும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது பொலிஸார் அவ்­வி­டத்தில் காவ­லரண் அமைத்து பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளார்கள்.

இவ்­வா­றான பல பிர­தே­சங்­களை பௌத்த குரு­மார்கள் இனங்­கண்­டுள்­ளார்கள். தொல்­பொருள் ஆய்வுத் திணைக்­களம் இவ்­வா­றான பிர­தே­சங்­களை வேலி­ய­மைத்து பாது­காக்க வேண்டும்.

அப்­பி­ர­தே­சங்கள் புரா­தன தொல்­பொருள் பிர­தே­சங்கள் என அறி­விப்புச் செய்து அதற்­கான  அறி­விப்புப் பல­கைகள் தொங்­க­வி­டப்­பட வேண்டும். தொல்­பொருள் திணைக்­களம் தனது கட­மை­களை சரி­யாக நிறை­வேற்­ற­வில்லை என்றார்.

திரு­கோ­ண­மலை மட்­டக்­க­ளப்பு, வவு­னியா மாவட்­டங்­களில் தொல்­பொருள் பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது என்றும் கூறினார்.

தொல்­பொருள் திணைக்­களப் பணிப்பாளர் செனரத் திசா­நா­யக்க
தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் செனரத் திசா­நா­யக்­க­விடம் இது தொடர்பில் ஜனா­தி­பதி வின­வினார்.

திணைக்­களம் மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கைகள் என்ன? எனவும் வின­வினார். இதன்போது செனரத் திசா­நா­யக்க பதி­ல­ளிக்­கையில்;
வடக்கில் தொல்­பொருள் பிர­தே­சங்கள் இனங் காணப்­பட்டு அவற்றை பாது­காக்க சட்ட­வ­டிக்­கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கில் அம்பாறையில் தொல்பொருள் பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

அவற்றுக்கு தொல்பொருள் பிரதேசமென அறிவிப்புப் பலகை இட வேண்டியுள்ளது என்றார்.

இக்கலந்துரையாடலில் மேதானந்த எல்லாவெல தேரர், பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகேயும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.