நிதிப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு !

 

kotha

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்பட்டுள்ளார். இன்­றைய தினம் அவரை கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள நிதிக் குற் றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறும் அவ­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.வாக்கு மூலம் ஒன்று பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு விசாரணைக்கு வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

2006 ஆம் ஆண்டு விமா­னப்­ப­டைக்கு நான்கு மிக் 27 ரக விமா­னங்கள் கொள்­வ­னவு செய்யும் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் நிதி மோசடி, லங்கா ஹொஸ்­பிட்டல்ஸ் நிறு­வ­னத்தில் பங்­கு­களை விற்­பனை செய்­ததாக கூறப்படும் விவகாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்பில் விசா­ரணை செய்து வாக்கு மூலம் பெற­வேண்­டி­யுள்­ள­தா­லேயே இவ்­வாறு அழைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்த கோத்­த­பாய ராஜ­பக்ஷ அன்­றைய தினம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு முன்­னி­லையில் ஆஜ­ரான நிலையில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னி­லையில் ஆஜ­ராக வேறு ஒரு திகதி கோரப்பட்டிருந்தது. இந் நிலை­யி­லேயே இன்று நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னி­லையில் ஆஜ­ராக அவ­ருக்கு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்வாறு இருக்க கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்ய இடைக்­கால தடை உத்­த­ரவு விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்று சட்ட பாது­காப்­புடன் அவர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரகக் கூடும் என அவரது சட்டத்தரணிகள் குழாத்தில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.

Tags