உப்பு உற்பத்தியில் இன்னும் இரு வருடங்களுக்குள் இலங்கைதன்னிறைவு அடையும் :அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

 

ஊடகப்பிரிவு

உப்பு உற்பத்தியில் இன்னும் இரு வருடங்களுக்குள் இலங்கைதன்னிறைவு அடையுமென்றும் அதற்கான பல்வேறுதிட்டங்களையும் கைத்தொழில் வர்த்தக அமைச்சுஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.

தென்னாசிய செயற்பாட்டு தளத்தை டிப்படையாகக்கொண்டு இலங்கையில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள்செயற்பாட்டுத் தலைவர் தலைவர் சுதிர் என் முரளிதாஸ்தலைமையிலான தூதுக்குழுவினர் அமைச்சர் ரிஷாட்தியுதீனை இன்று (22) மாலை சந்தித்துப் பேசிய போதேஅமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ நா செயற்பாட்டு நிர்வாகம் இலங்கையில் முன்னெடுத்துவரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்அமைச்சருடன் விரிவாக கலைந்துரையாடிய போது அமைச்சர்தமது அமைச்சின் செயற்திட்டங்கள் தொடர்பான பல்வேறுகருத்துக்களை வெளியிட்டார்இந்த சந்திப்பில் அமைச்சின்செயலாளர் டி எம் கே பி தென்னகோனும் கலந்து கொண்டார்.

அமைச்சர் இங்கு கூறியதாவது,

ஐக்கிய நாடுகள் செயற்பாட்டு நிறுவனம் வடக்கு – கிழக்குபகுதிகளில் மேற்கொண்டு வரும் வெற்றிகரமானபணிகளுக்காக நான் எனது நன்றிகளையும்பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்இந்தர்வேதச நிறுவனமானது எதிர்காலத்திலும் இலங்கைக்குஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் இருக்கின்றனஅவைகளைநாம் அடையாளம் கண்டுள்ளோம்.

இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவாகஇருக்கின்ற போதும் எங்கள் நாட்டிலே உப்பிற்கு ட்டுப்பாடேநிலவுகின்றதுஉப்பை நாங்கள் இறக்குமதி செய்கின்றதுர்ப்பாகிய நிலையிலேயே இன்னும் ருக்கின்றோம்எனவேஎமது கடல் வளத்தைப் பயன்படுத்தி உப்பு உற்பத்தியைஅதிகரிப்பதற்கு நாம் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்

மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தை வளப்படுத்துவதற்குஅங்கேயுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்எனவே ஐ நா செயற்பாட்டு நிறுவனம் இந்தமுயற்சிக்கு உதவுவதோடு கிழக்கிலும் நாங்கள்டையாளங்கண்டுள்ள பிரதேசங்களில் உப்பு விளைச்சலைஅதிகரிக்க உதவ வேண்டும்.

அத்துடன் இலங்கையின் தோல் பொருட்கள் பதனிடும்தொழிற்சாலையை நிறுவுவதற்கும் ஐநா செயற்பாட்டுநிறுவனத்தின் உதவியை கோருகின்றோம்இந்த முயற்சியில்இலங்கை அரசும் வழங்குனர்களும் ஐ நா செயற்பாட்டுநிறுவனமும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் உரியஇலக்கை அடைய முடியுமென அமைச்சர் தெரிவித்தர்.