நாடாளாவிய ரீதியில் தபால் சேவை ஊழியர்கள் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பு !

நாடாளாவிய ரீதியில், இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக கூட்டு தபால் தொழிற்சங்கங்கள், இன்று அறிவித்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு நாளைய தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தபால் சேவை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.