எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் : பிரதமர்

எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை சந்திக்க எமது கட்சி தயாராக இருக்கின்றது எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil-sri-lankan-prime-minister-ranil-wickremesinghe-in-colombo-on-august-13-2015-afp

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்த செயற் குழுக் கூட்டத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.