சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து முஜிபுர் ரஹ்மான் அதிருப்தி !

Mujeebur-Rahman

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் நல்லாட்சியை இல்லாமல் செய்ய முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமரினாலேயே அமைச்சர்கள் வரப்பிரசாதங்களை அனுபவித்து வருவதாகவும் எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பினை நிறைவேற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.