அட்டாளைச்சேனை அஸ்கரின் ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூல் வெளியிட்டு விழா

வசந்தம் எப்.எம்.அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய ‘இந்த காலைப் பொழுது’ கவிதை தொகுதி நூல் வெளியிட்டு விழா இம் மாதம் 17 (17.12.2016) சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு தபால் தலைமை கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது.

asker-01
சிரேஷ்ட சட்டத்தரணியும்,கவிஞருமான ஜி.இராஜகுலேந்திரா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி முகாமையாளர் முருகேசு குலேந்திரன் முன்னிலை வகிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் கவிஞர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும்,ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேஷன் மற்றும் உலக அறிவிப்பாளர் டீ.ர்.அப்துல் ஹமீட் கொளரவ அதிதிகளாக கலந்து சிற்ப்பிக்கவுள்ளனர்.

 
அஸ்கரின் ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூல் பற்றிய சிறப்பு கண்ணோட்டத்தை இந்தியாவில் இருந்து வருகை தரும் தமிழ் சினிமா திரைப்பட இயக்குநர் மீராகதிரவன்,பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி,திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் ஹஸீன் மற்றும் கவிஞர் அனார் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
நூலின் முதல் பிரதியை புரவலர் புத்தக பூங்கா நிறுவுனர் இலக்கிய புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக் கொள்ளும் இந் நிகழ்வில் மேலும் தென்னிந்திய தமிழ் சினிமா இயக்குநர்களும்,கலை இலக்கிய வாதிகளும்,கவிஞர்களும்,ஊடகவியலாளர்களும்,அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்,இந் நிகழ்வினை பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளரும் வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு நிறைவேற்று அதிகாரியுமான எம்.எஸ்.இர்பான் முஹம்மட் தொகுத்து வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது…