ஆறுமுகன் தொண்டமானின் ஆதரவாளர்கள் அமைச்சர் திகாவுடன் இணைவு

க.கிஷாந்தன்

 

 திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை, கெலிவத்தை, திம்புள்ள ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தில் உத்தியோகபூர்வமாக 03.12.2016 அன்று இணைந்துள்ளனர்.

340a9770

தமக்கான காணி பிரச்சினை, வீட்டு பிரச்சினை உள்ளிட்ட ஏனைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக குறித்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக ஒருமுகப்பட்ட ரீதியில் இத் தோட்ட தொழிலாளர்கள் தாம் இதுவரை அங்கம் வகித்த கட்சிகளிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துக் கொண்டமை குறிப்பிடதக்கது.

340a9792

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 03.12.2016 அன்று காலை அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் உடன் புதிய அங்கத்தவர்களாக இணைந்துக் கொள்ளும் தொழிலாளர்கள் ஆகியோருடன் போகாவத்தை கலாச்சார மண்டபத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

dsc06043

இக்கலந்துரையாடலின் பின் புதிய அங்கத்தவர்களாக தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு 300ற்கும் அதிகமானோர் தனது ஆதரவினை உத்தியோகபூர்வமாக வழங்குவதாக தெரிவித்தனர்.