எவன்கார்ட் தொடர்பான வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் வரை ஒத்தி வைப்பு

எவன்கார்ட் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகளுக்காக இன்று கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேர் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 2ஆம் சந்தேகநபரை தவிர்த்து மற்றை அனைவருக்கும் நிபந்தனைகளுக்கு மத்தியில் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் வெளிநாடுகளுக்கு செல்லவேண்டுமாயின் ஒரு வாரத்திற்கு முன்பே நீதிமன்றிடம் அறிவிக்க வேண்டும் என்றும், குறித்த பயணம் தொடர்பான அனைத்து விடயங்களும் நீதிமன்றிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், எவன்கார்ட் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக புதிதாக நீதிபதி ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.