கைது செய்யப்பட்டுள்ள கருணா அம்மான், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்!

karuna-380-seithy-720x480

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று (29)அழைக்கப்பட்டிருந்தார்.

கருணா அம்மான் அந்த வாகனத்தை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கருணா அம்மான், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.