ஹஜ் ஏற்­பா­டு­களை சீர­மைத்து மக்­க­ளுக்கு சிறந்த ஹஜ் சேவையை வழங்­கு­வ­தற்­காக விஷேட சட்டம் !

ஹஜ் ஏற்­பா­டு­களை சீர­மைத்து மக்­க­ளுக்கு சிறந்த ஹஜ் சேவையை வழங்­கு­வ­தற்­காக முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சு பாரா­ளு­மன்­றத்தில் விஷேட சட்டம் ஒன்­றினை நிறை­வேற்­றிக்­கொள்­ள­வுள்­ளது. 

 

அடுத்த வரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு முன்பு இந்த ஹஜ் சட்ட மூலத்தை அமைச்­ச­ர­வையில்சமர்ப்­பித்து அங்­கீ­காரம் பெற்றுக் கொண்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்­கான எற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். 

haleem

 

ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்­டத்தை வரைபு செய்­வ­தற்­கென ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதி­மன்றின் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் ஆலோ­ச­னைகள் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இதற்­காக இன்று திங்­கட்­கி­ழமை அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்­களும் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபும் சந்­திப்­பொன்றில் ஈடு­ப­ட­வுள்­ளனர். 

இது தொடர்பில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்;கடந்த வரு­டங்­களில் ஹஜ் ஏற்­பா­டுகள் பல சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­பட்­டது. நீதி­மன்றம் வரை ஹஜ் விவகாரம் கொண்டு செல்­லப்­பட்­டது. தற்­போது இது தொடர்­பான வழக்­கொன்று விசா­ர­ணையின் கீழ் இருக்­கி­றது. இவ்­வா­றான நிலைமை எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டா­தி­ருப்­ப­தற்­கா­கவே ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென ஒரு சட்­டத்தை நிறை­வேற்றிக் கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்கும் ஹஜ் முக­வர்­க­ளுக்கும் பாதிப்­பில்­லாத வகையில் இந்தச் சட்ட மூலம் வரைபு செய்­யப்­படும் என்றார். இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி மொஹமட் தாஹா சியாக் கருத்து தெரி­விக்­கையில்;எதிர்­வரும் 6 மாத காலத்­துக்குள் ஹஜ் குழு முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூ­புடன் கலந்­து­ரை­யாடி சட்ட மூலத்தை வரைபு செய்து பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­படும் 10 ஹஜ் முக­வர்­களால் ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு தற்­போது விசா­ர­ணையின் கீழ் உள்­ளது. வழக்கு விசா­ரணை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 26 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென சட்­ட­மொன்­றினை நிறை­வேற்றிக் கொண்டால் இவ்­வா­றான வழக்­கு­க­ளுக்கு வாய்ப்பு ஏற்­ப­டாது என்றார். ஸ்ரீலங்கா ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.எம்.அஹமட் நிஜார் கருத்துத் தெரி­விக்­கையில்;

 ‘எதிர்­கா­லத்தில் ஹஜ் ஏற்­பா­டுகள் எவ்­வாறு சீர­மைக்­கப்­பட வேண்டும் என மகஜர் ஒன்று அமைச்சர் ஹலீ­முக்கும் அரச ஹஜ் குழு­வுக்கும் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கும் அனுப்­பி­வைத்­துள்­ள­தாகத் தெரி­வித்தார்.

குறித்த மக­ஜரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; 

‘முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஒரு ஹஜ் பய­ணி­யி­ட­மி­ருந்து மூவா­யிரம் ரூபா ஹஜ் முக­வர்கள் ஊடாக அற­வி­டு­கி­றது. இவ்­வாறு அற­வி­டப்­படும் பணம் திணைக்­க­ளத்­தினால் வேறு தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டாது ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்கு மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

ஹஜ் பயணம் மேற்­கொள்­ள­வுள்ளோர். திணைக்­க­ளத்தில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி­முறை இருக்­கி­றது. இம்­முறை மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். இதற்­கென ஓர் இணை­யத்­தளம் உரு­வாக்­கப்­பட வேண்டும். பதிவு செய்­வோ­ரி­ட­மி­ருந்து 50 ஆயிரம் ரூபா அற­வி­டப்­பட்டு அவ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு அத்­தாட்சிப் பத்­திரம் ஒன்று வழங்­கப்­பட வேண்டும். அந்த அத்­தாட்சிப் பத்­தி­ரத்தை விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ் முக­வ­ரிடம் சமர்ப்­பித்து ஹஜ் ஏற்­பா­டு­களைச் செய்து கொள்ள வேண்டும். 

ஏனென்றால் திணைக்களத்தில் தற்போது 10 ஆயிரம் பேர் ஹஜ் பயணத்துக்கென தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இவ்வருடமே பயணம் மேற்கொள்பவர்கள் அல்லர். ஹஜ் முகவர்களாலும் ஹஜ் வழிகாட்டிகளினாலும் ஹஜ் பயணத்தை திட்டமிட்டில்லாதவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.