இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? யார்? முதல் போட்டி இன்று !

ipl-2015-opening-ceremony_1

ஐ.பி.எல். போட்­டியில் நேர்த்­தி­யாக விளை­யாடும் அணி­களில் முதன்­மை­யா­னது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலை­மை­யி­லான இந்த அணி 2 முறை (2010, 2011) கிண்ணத்தை வென்­றுள்­ளது. 3 முறை 2ஆவது இடத்தை பிடித்­தது. இது­வரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்­டி­யிலும் அரை இறுதி மற்றும் ‘பிளே ஓவ்சுற்­றுக்கு நுழைந்த ஒரே அணி­யாகும்.
இந்த தொடரில் ஆரம்பத்திலிருந்தே சென்னை அணி சிறப்­பாக விளை­யாடி வரு­கி­றது. 9 ஆட்­டங்களில் வெற்றி பெற்­றது. 5 போட்­டிகளில் தோல்­வியை தழு­வி­யது. ராஜஸ்தான் கொல்­கத்தா, ஹைத­ராபாத், மும்பை, டெல்லி அணி­க­ளிடம் தோற்­றது.

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சம­ப­லத்­துடன் திகழ்­கி­றது. புள்­ளிகள் பட்­டி­யலில் முதல் இடத்தை பிடித்ததன் மூலம் இறு­திப்­போட்­டியில் நுழைய 2 முறை வாய்ப்பு இருக்­கி­றது.
ரோஹித்­சர்மா தலை­மை­யி­லான மும்பை இந்­தியன்ஸ் அணி தொடக்­கத்தில் 4 ஆட்­டங்களில் தொடர்ச்­சி­யாக தோற்­றது. அதில் இருந்து மீண்டு தொடர்ச்­சி­யாக 5 போட்­டிகளில் வெற்றி பெற்­றது. கடைசி ‘லீக்’ ஆட்­டத்தில் ஐத­ரா­பாத்தை வீழ்த்­தி­யதன் மூலம் ‘பிளேஓவ்’ சுற்­றுக்கு முன்­னே­றி­யது. 2ஆவது இடத்தை பிடித்­ததன் மூலம் இறு­திப்­போட்­டிக்கு நுழைய சென்­னையை போல 2 முறை வாய்ப்பு பெற்­றுள்­ளது.

‘பிளேஓவ்முறை 2011இல் அறி­முகம் செய்­யப்­பட்­டது. சென்­னையை போலவே மும்பை அணியும் 5ஆவது முறை­யாக ‘பிளேஓவ்’ சுற்­றுக்கு முன்­னேறி உள்­ளது. 2011ஆம் ஆண்டு சம்­பி­ய­னான மும்பை அணி சம­ப­லத்­துடன் திகழ்­கி­றது.

சிறந்த வீரர்­களை கொண்ட பெங்­களூர் அணி இது­வரை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்­றது இல்லை. 2011ஆம் ஆண்­டுக்கு பிறகு தற்­போது தான்‘­பி­ளேஓவ்’ சுற்­றுக்கு தகுதி பெற்று உள்­ளது. 2 முறை இறு­திப்­போட்­டியில் தோல்வி அடைந்த அந்த அணி தற்­போது 3ஆவது இடத்தை பிடித்து முன்­னேறி உள்­ளது. எலி­மி­னேட்டர் ஆட்­டத்தில் விளை­யா­டு­வதால் தோல்வி அடைந்தால் வெளி­யேற்­றப்­படும். சிறந்த துடுப்பாட்ட வரி­சையை கொண்ட அணி­யாகும்.

கடந்த முறை மயி­ரி­ழையில் ‘பிளேஓவ்’ வாய்ப்பை இழந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் இந்த முறை கொல்­கத்­தாவை வீழ்த்­தி­யதன் மூலம் 4ஆவது இடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை பெற்­றது. அறி­முக ஐ.பி.எல். போட்­டியில் சம்­பியன் பட்டம் வென்ற அந்த அணி இந்த தொடரில் தொடக்­கத்தில் ஆதிக்கம் செலுத்­தி­யது. தொடர்ச்­சி­யாக 5 ஆட்­டங்களில் வெற்றி பெற்­றது. பின்னர் சரிவு ஏற்பட்டது. அதன்பிறகு மீண்டது கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது. 2ஆவது முறையாக ‘பிளே ஓவ்’ சுற்றில் விளையாடுகிறது.

இறுதிப்போட்டிக்கு முதலில் செல்லும் அணி எது என்பது இன்றையப் போட்டியில் தெரியும். சென்னை மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.