2030ம் ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதற்கு பாராளுமன்ற விஷேட செயற்குழு நியமனம்!

 

parliament srilanka

நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2030ம்ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதற்கு பாராளுமன்ற விஷேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் தலைமையில் அந்த விஷேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 15 பேர் அங்கம் வகிக்கின்றனர். 

நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு நாட்டில் செயற்படுத்தவுள்ள பல விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பது இந்த செயற்குழுவின் பொறுப்பாகும் என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால கூறினார்.