ஜனாதிபதி சட்டத்தரணி; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமனம் !

42684307700148577bribe5

ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்னே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

25 வருடத்திற்கும் அதிக காலமாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய அவர், தற்போதைய பதவிக்கு நியமிக்கும் போது மேலதிக சொலிஸ்டர் ஜெனரலாக அத்திணைக்களத்தில் பதவி வகித்துள்ளார். 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக இருந்த தில்ருக்ஷி விக்ரமசிங்கவின் பதவி விலகலையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.