இனவாதி தயாகமகவை உருவாக்கியது முஸ்லிம் தரகர்களே: SM சபீஸ்

 
மூவின மக்களும் சமமாக வாழும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின்  தலைவராகவுள்ள தயாகமகே புத்தர் சிலை எங்கும் வைக்கப்படலாம் ஆனால் அகற்ற முடியாது என பேசியிருப்பது மிலேச்சத்தனமான செயலாகும்.
safees
 
பல பாராளுமன்ற தேர்தல்களில் அம்பாறைமக்களால் தோற்கடிக்கப்பட்ட இனவாதி தயாகமகே கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மக்கள் குறைந்தளவிலான வாக்குகளை அழித்திருந்தும் முஸ்லிம்மக்கள் சுமார் 20000 வாக்குகளை வாரிவழங்கி இனவாதியை வெற்றி பெறவைத்தனர்.
 
இதற்கு காரணம் இனவாதி கமகே  முஸ்லிம் மக்களுக்கு செய்த   சேவைகள் கிடையாது மாறாக   பணத்துக்கும் சாராயத்துக்கும் அடிமைப்பட்ட முஸ்லிம் தரகர்கள்  ஏழ்மையில் வாழ்ந்த எமது  மக்களை ஏமாற்றி வெறும் 500 ரூபாயை கொடுத்து அவர்களின் வாக்குரிமையை அபகரித்து எமது மக்களின் உரிமைகளை துரோகியின் காலடியில் கொண்டுபோய் சேர்த்தனர்
 
முற்போக்கு சிந்தனை கொண்டு சிந்திப்பதற்கு தயாரில்லாத நமது மக்களில் ஒரு குழுவினர் 500 ரூபாய் கொண்டு ஏதோ உலகத்தை வாங்கிவிடலாம் என்று நினைத்து வருட எமது சமூக உரிமையை இனவாதிக்கு  தாரைவார்து விட்டனர் நாம் தயகமகவை விட நமது மக்களைத்தான் நொந்துகொள்ளவேண்டும்.
 
கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான பகுதிகள் தீகவாபிக்கு சொந்தமானது என கூறியுள்ள இனவாதி துரோகி தயாகமகேவுக்கு பதில் சொல்ல,
 
 
காலம் மாறும் பொறுத்திருப்போம் தரகர்களுக்கு வாழ்வு வரம் கொடுக்கவும் காத்திருப்போம்