மலேசிய தொழிலாளர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி!

201611021508310526_boat-sinks-off-indonesia-batam-killing-17_secvpfமலேசிய நாட்டின் தென்பகுதியில் இருந்து இந்தோனேசியா நாட்டில் வேலை செய்ய சில தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிகொண்டு ஒரு இயந்திரப் படகு கடல் வழியாக சென்று கொண்டிருந்தது.

சிங்கப்பூருக்கு தெற்கேயுள்ள பட்டாம் தீவு வழியாக சென்றபோது இன்று அதிகாலை கடலில் பலத்த காற்றுடன் திடீரென்று எழுந்த பேரலைகளில் சிக்கிய அந்தப் படகு பாறைமீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அந்தப் படகில் சென்ற தொழிலாளர்களில் 17 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 40 பேர் மீட்கப்பட்டதாகவும், எஞ்சியோரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் பட்டாம் தீவை சேர்ந்த ரியாவ் மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.