இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் குற்றத்தை ஏற்கத் தயார்

சொத்து மதிப்பை சரியாக வெளிப்படுத்தாத குற்றம் சுமத்தப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளில் குற்றத்தை ஏற்றுக் கொள்ள தயார் என்று முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன நீதிமன்றில் தெரிவத்துள்ளார். 

குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இவ்வாறு குற்றத்தை ஏற்றுக்கொண்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

இதனையடுத்து ஒரு இலட்சம் ரூபாவான சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். 

2005 – 2007 காலப்பகுதில் அவர் சொத்து மதிப்பை வெளிப்படுத்தவில்லை என்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சரண குணவர்தன மீதான குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக குறித்த வழக்கு ஜனவரி 05ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.