எமது இழந்த உற­வு­களை நினை­வு­கூ­ரு­வ­தற்கு அனை­வ­ருக்கும் உரிமை உண்டு , தமிழ் மக்­க­ளா­கிய நாமே அதன் வலி­களை உணர்ந்­த­வர்கள் :இரா. சம்பந்தன் !

 

For Tamil Nadu Bureau: Chennai 26th September 2006--  R. Sampanthan, Leader, TNA Parliamentary Group in Sri Lanka delevering lecture on 'Sri Lankan Situation' at Observer Research Foundation in Chennai. Photo: K_V_Srinivasan. (Digital)

 எமது இழந்த உற­வு­களை நினை­வு­கூ­ரு­வ­தற்கு அனை­வ­ருக்கும் உரிமை உண்டு. தமிழ் மக்­க­ளா­கிய நாமே அதன் வலி­களை உணர்ந்­த­வர்கள். அதனை எவரும் தடுத்து நிறுத்­தி­வி­ட­மு­டி­யாது என தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, இவ்­வி­ட­யத்தை மீண்டும் மீண்டும் சர்ச்­சை­யாக்­கு­வதை நிறுத்­த வேண்டும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

இன்­றைய தினம் இறுதி யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூ­ரு­வது தொடர்­பாக நீதி­மன்ற தடை உட்­பட பல்­வேறு சர்ச்­சைகள் எழுந்­துள்­ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர் இரா.சம்பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இந்த நாட்­டி­லுள்ள தமிழ், முஸ்லிம், சிங்­க­ள­வர்கள் என அனைத்து மக்­க­ளுக்கும் தங்­க­ளு­டைய துக்­கத்தை அனுஷ்­டிப்­ப­தற்கு உரிமை உள்­ளது. அதற்­கான பூரண சுதந்­திரம் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

விசே­ட­மாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த எமது மக்கள் அசா­தா­ரண காலத்தில் கண்ட இழப்­புக்கள் ஏராளம். அவர்­களே இழப்பின் வலியை அதிகம் உணர்ந்­த­வர்கள். தமது உற­வு­களின் இறப்பை நினை­வு­கூரும் அவர்களின் உணர்­வுக்கு மதிப்­ப­ளிக்­கப்­ப­ட­வேண்டும். அதனை தடுப்­ப­தற்கு எவ­ருக்கும் அதி­கா­ர­மில்லை.

கடந்த வருடம் இதே நாளில் யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நினை­வேந்தல் நிகழ்வை மேற்­கொண்­ட­போது பல்­க­லைக்­க­ழ­கத்­தினுள் அத்­து­மீறில் நுழைந்து அவர்கள் கைது செய்­யப்­பட்­டார்கள். அது மிகவும் தவ­றான விடயம் என்­பதை நான் பரா­ளு­மன்றில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன்.

இந்­நி­லையில் தற்­போது மாறு­பட்­ட­தோற்­றப்­பாட்டை காண்­பித்து உற­வு­க­ளுக்­காக அஞ்­ச­லி­செய்­வதை தட
க்க முனை­கின்­றார்கள். அச்­செ­யற்­பா­டு­களை நிறுத்­தப்­பட்டு இழந்­த­வர்­களை நினை­வு­கூர்ந்து அஞ்­சலி செய்­வ­தற்கு சகலரும் உரித்­து­டை­ய­வர்கள் என்­பதை உணர்ந்தும் அவர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்தும் சுந்­தி­ர­மாக அக் கரு­மத்தைமேற்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­க­வேண்டும்.

அதே­நேரம் வடக்கு கிழக்கு வாழ்­தமிழ் மக்­களும் வேண்­டாத சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான கரு­மங்­களை கைவிட்டு அமை­தி­யான முறையில் தமது அஞ்­சலி செய்யும் கரு­மங்­களை மேற்­கொள்­ள­வேண்டும் எனக் கேட்­டுக்­கொள்­கின்றேன் என்றார்.

சுரேஷ்­பி­ரே­ம­சந்­திரன் எம்.பி 

                                                                  இவ்விடயம் குறித்து கூட்suresh-premachandran-MP1டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

மர­ணித்த எமது உற­வு­க­ளுக்காக அஞ்­சலி செய்­வ­தற்கு அல்­லது ஒரு விநா­டி­யேனும் நினை­வு­கூ­ரு­வ­தற்கு கடந்த காலத்தில் நாம் எத்­த­னையோ கோரிக்­கை­களை விடுத்­த­போதும் அவை அனைத்­திற்கும் இட­ம­ளிக்­காது அப்­போ­தைய அர­சாங்கம் இரும்­புக்­கரம் கொண்டு இரா­ணுவ இயந்­தி­ரத்தை பயன்­ப­டுத்தி தடுத்துவந்­தது.

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஜன­நா­யக முறை­யி­லான ஆட்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக உலக நாடு­க­ளி­டமும் எம்­மி­டமும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. அதன் அடிப்­ப­டையில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினைவு கூரு­வ­தற்கு அனு­ம­தியும் அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் நீதித்­துறை அதற்கு தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­தி­ருக்­கின்­றது.

ஒரு­பக்கம் அனு­மதி வழங்­கிய அர­சாங்கம் மறு­பக்­கத்தில் பொலிஸ், நிதித்­துறை சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டு­வ­தாக கூறி அதனை பயன்­ப­டுத்தி எமது உற­வு­களை நினைவு கூரு­வதை தடுத்து வரு­கின்­றது. இது எந்­த­வ­கையில் நியா­ய­மா­ன­தாகும்.

உயி­ரி­ழந்த ஒவ்­வொரு உற­வையும் நினை­வு­கோ­ரு­வது எமது அனை­வ­ரி­னதும் தலை­யாக கடமை. அசா­தா­ரண காலத்தில் எத்­த­னையோ இழப்­புக்­களை நேர­டி­யாக கண்டு அதன் வலி­களை உணர்ந்­த­வர்கள் நாங்கள். அவ்­வா­றி­ருக்­கையில் எமது மக்­களை நினை­வு­கூ­ரு­வதை தடுப்­ப­தென்­பது மிக­மிக கண்­டிக்­கத்­த­க­தொன்­றாகும்.

மேலும் இந்த நாட்டில் மர­ணித்த ஒரு­வரை நினைவு கூரு­வ­தற்கு கூட அனு­மதி மறுக்­கப்­ப­டு­கின்­ற­தென்­பது அடிப்­படை உரி­மையே மறுப்­ப­தற்கு சம­மா­ன­தா­கவே உள்­ளது. அதன் பின்னர் இங்கு ஜன­நா­யகம் நிலை­பெற்­றி­ருக்­கின்­றது என எவ்வாறு கூற முடியும்.

எமது மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் மதிக்க வேண்டும். அதனை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் தமது இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செய்வதற்காகவாது சுதந்திரம் வழங்கப்படவேண்டும்.

அதேநேரம் இவ்வாறு தடுக்கும்செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதென்பது தமிழ் மக்களை அரசாங்கத்திலிருந்து வெகுதூரத்திற்கு விலக்கிச் செல்லுவதற்கான பாதையை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்றார்.