அல்­ அக்ஸா விவகாரம்-அர­சாங்கம் முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டாது :ஹசன்­அலி

maxresdefaultஅல்­ அக்ஸா முஸ்­லிம்­க­ளுக்கே சொந்­த­மா­னது. இஸ்­ரே­லுக்கு சொந்­த­மா­ன­தல்ல என்ற யுனெஸ்­கோவின் பிரே­ர­ணையை ஆத­ரித்து இலங்கை வாக்­க­ளிக்­கா­மைக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கையெ­ழுத்­திட்டு அர­சாங்­கத்­துக்கு மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்து முஸ்லிம் சமூ­கத்தின் ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன்­அலி தெரி­வித்­துள்ளார்.
 

அல்­ அக்ஸா பள்­ளி­வாசல் தொடர்­பான முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வான யுனெஸ்­கோவின் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் வாக்­க­ளிக்­காது நடு­நி­லைமை வகித்­தமை தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அறிக்­கையில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;
அல்­அக்ஸா விட­யத்தை சர்­வ­தேச அர­சி­ய­லோடு தொடர்­பு­ப­டுத்திப் பார்க்கக் கூடாது. இவ்­வி­வ­காரம் சர்­வ­தேச அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்­ட­தாகும். அல்­அக்ஸா முஸ்­லிம்­களின் முத­லா­வது கிப்­லா­வாகும்.

குர்­ஆனில் இது தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அல்­அக்ஸா விவ­காரம் சர்­வ­தேச சாயம் பூசக்­கூ­டி­ய­தல்ல. அல்­அக்ஸா விவ­கா­ரத்தில் யுனெஸ்­கோவின் பிரே­ர­ணைக்கு அர­சாங்கம் வாக்­க­ளிக்­காமை முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­தி­யுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்கம் அமை­வ­தற்கு இந்­நாட்டு முஸ்­லிம்கள் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பு வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். இந்த அரசின் மீது நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார்கள். அர­சாங்கம் முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டாது.

என்­றாலும் நடந்­தது நடந்து முடிந்­து­விட்­டது. இதன்­பி­றகு என்ன நட­வ­டிக்கை மேற்­கொள்­ளலாம் எனத் திட்­ட­மி­ட­வேண்டும். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹிர் மௌலானா பாரா­ளு­மன்­றத்தில் இது தொடர்­பாக தனி­நபர் பிரே­ர­ணை­யொன்­றினைக் கொண்­டு­வரத் தீர்­மா­னித்­தி­ருப்­பது வரவேற்கத்தக்கது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விவகாரத்தில் மௌனம் சாதிக்காது அனைவரும் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றினைச் சமர்ப்பித்து தங்களது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.