கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை இரத்தினக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன !

gemstone-colorsஒரு கோடி 16 இலட்சத்து 40,000 ரூபா பெறுமதியான ஒரு தொகை இரத்திணக்கற்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. 

சீனப் பிரஜை ஒருவர் குறித்த இரத்திணக்கற்களை சீனாவிற்கு கடத்திச்செல்ல முற்பட்ட போது நேற்று இரவு இவை கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு கூறியுள்ளது. 

இதன்போது அந்த பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 247 இரத்திணக்கற்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபாரன சீனப் பெண்ணை 03 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட்டு விடுதலை செய்ததாக சுங்கப் பிரிவு கூறியுள்ளது.