இலங்கையின் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி வழங்கவுள்ளது

இலங்கையின் 2020 வருடம் வரையிலான அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் 34 பில்லியன் ரூபாய்களை வழங்கவுள்ளது.

பிரசல்ஸ்ஸில் இது தொடர்பான அறிவித்தல்கள் நேற்று (19) விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே 2007-2013ஆம் ஆண்டுக்கான நிதி உதவியைக்காட்டிலும் இது இரண்டு மடங்குகளாகும் என பிரதம மந்திரி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.