தமது நிறுவனத்துக்குள் இருக்கும் திருடர்களை முதலில் தேடுமாறு பொலிஸ் மா அதிபரிடம் நாமல்…!

Namal-640x640_Fotorதன்னை சிறையில் அடைக்க வந்தவர் தன்னைவிட திருடர் என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஹம்பாந்தோட்டை – மைத்திரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தன்னை கைதுசெய்ய வந்த பொலிஸ் அதிகாரி கொலை வழக்கொன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும், இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அவருக்கு பிணை கிடைத்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

இதன்மூலம் தன்னை சிறையில் அடைக்க வந்தவர் தன்னைவிட திருடன் என தௌிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் 71 வீத கொலைகளை தடுத்து நிறுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ள நிலையில், தமது நிறுவனத்துக்குள் இருக்கும் திருடர்களை முதலில் தேடுமாறு தான் அவரிடம் (பொலிஸ் மா அதிபரிடம்) கோரிக்கை விடுப்பதாகவும் நாமல் கூறியுள்ளார். 

மேலும் நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பின் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.