இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதம் வழங்கப்பட்டது

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதம் வழங்கப்பட்டது.

 

253334

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரிடமிருந்து இந்த தண்டாயுதத்தை பெற்றுக் கொண்ட கேப்டன் விராட் கோலி இந்த வெற்றி குறித்து கூறுகையில் “டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நம்பர் 1 இடத்திற்கான கதாயுதத்தை வாங்கிய தருணம் மிகவும் பெருமையாக இருந்தது. தனிப்பட்ட சாதனைகள் தேவை எனினும் விளையாடும் அணிக்காக என்ன செய்தோம் என்பதே முக்கியம்.  

இந்த வெற்றிக்கு உதவிய வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விடாமுயற்சி, கடுமையான உழைப்பு இரண்டினால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடம் சாத்தியமாகியுள்ளது.

வரும் காலங்களில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. இந்திய அணி சிறந்த டெஸ்ட் அணிகளில் ஒன்றாக நினைவு கூறப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.