இலங்கை தொடர்பாக செப்டெம்பரில் வெளியாகும் ஐ.நா.வின் அறிக்கை மிகக் கடுமையாக இருக்கும் !

images (2)போரின்  இறுதித் தருணங்களின் நடைபெற்ற  சம்பவங்கள் மற்றும்  வெள்ளைக்கொடி விவகாரம்  தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள்  விசேட   பிரதிநிதி  எரிக்  சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய  செவ்வியிலேயே  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போரின்  இறுதித் தருணங்கள் தொடர்பாக நம்பகத்தன்மை மிக்க தேசிய அல்லது  சர்வதேச ஆணையகத்தின் முன்பாக நான் அறிந்த அனைத்தையும்  தெரிவிப்பதற்கு ஆயத்தமாக உள்ளேன். செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ள இலங்கை குறித்த அறிக்கை சாதரணமாக  காணப்படாது   மிகக் கடுமையானதாக இருக்கும். போர் குற்றங்களில்   ஈடுபட்டவர்கள் எவராயிருப்பினும் அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அறிக்கையை எதிர்பார்க்க வேண்டும்.

பால்க்கன்ஸ், ஆபிரிக்கா,  இலத்தீன்  அமெரிக்கா போன்ற நாடுகளில்  போர்க்குற்றச்சாட்டு  பொறுப்புக் கூறலுக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. ஆனால் இறுதியில் போர்க்  குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட்டு  நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எவ்வித தயக்கமுமின்றி குற்றவாளிகள் அனைவரும்  தண்டிக்கப்பட வேண்டும்.  

இலங்கை அராசங்கமும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொள்ள முடியாத போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது மிகத் தெளிவான  ஒரு விடயமாகும். உண்மையை நிலை நாட்டுவதே மிகவும் அவசரமான ஒரு விடயம் ஏனெனில், அப்போது தான் யுத்தத்தினால் உயிர் தப்பியவர்கள் தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன  நடந்தது என்பதை அறிந்த கொள்ளமுடியும். தனது கணவன் அல்லது பிள்ளைகள் உயிருடன் இருப்பதை அறியாமல் பெண்ணொருவரால்  தனது வாழ்க்கையை எவ்வாறு மீண்டும்  ஆரம்பிக்க முடியும் . நான்  எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகவே உள்ளேன். எனினும்  இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் வரமாட்டேன்.  நான் அவ்வாறு பொதுத் தேர்தலுக்கு முன்னர் இலங்கை விஜயம்  மேற்கொண்டால் எனது வருகையை சிலர் பயன்படுத்த முயற்சிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.