பெருந் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது : ராஜித்த

rajithaஏற்றுமதிப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமையால் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில், கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

நிலவும் காலநிலையால் ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.