எதிர்­வரும் 2020 ஆம் ஆண்­டு­வரை நாட்டில் பொதுத் தேர்­த­லொன்று நடத்­தப்­பட மாட்­டாது:பைஸர் முஸ்தபா

faisarஎதிர்­வரும் 2020 ஆம் ஆண்­டு­வரை நாட்டில் பொதுத் தேர்­த­லொன்று நடத்­தப்­பட மாட்­டாது. தேர்தல் நெருங்கும் சந்­தர்ப்­பங்­களில் அர­சி­யல்­வா­திகள் தையல் மெஷின்­க­ளையும் வேறு பல பொருட்­க­ளையும் இல­வ­ச­மாகத் தந்து வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள முயற்­சிப்­பார்கள்.

இவ்­வா­றான அர­சி­யல்­வா­திகள் தொடர்பில் மக்கள் விழிப்­பாக இருக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ரா­ட்சி அமைச்சர் தெரி­வித்தார்.

கொழும்பு தெமட்­ட­கொ­டையில் நேற்று முன்­தினம் மாலை பாலம் ஒன்­றினைத் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;
‘ஏழை மக்­களின் நலன்­களைப் பேணும் ஒரே கட்சி ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யாகும். சிலர் இக்­கட்­சியை பிள­வு­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். ஏழை­களின் கட்­சி­யான இக்­கட்­சியைப் பிள­வு­ப­டுத்­தவோ இன்றேல் புதிய கட்­சி­யொன்­றினை ஆரம்­பிக்­கவோ வேண்­டா­மென சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் வேண்டிக் கொள்­கிறேன்.

மத்­திய கொழும்பில் தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் இன, மத வேறு­பா­டு­க­ளின்றி ஐக்­கி­யத்­துடன் சமா­தா­ன­மாக வாழ்­கி­றார்கள். ஆனால் அவர்­க­ளுக்குத் தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னைகள் நிறைய இருக்­கின்­றன. இப்­ப­குதி மக்கள் கல்­வி­யிலும் பொரு­ளா­தா­ரத்­திலும் பின் தங்­கி­யுள்­ளார்கள். கடந்த 50 வருட காலத்தில் இம் மக்­க­ளது வாழ்க்கைத் தரம் உய­ர­வில்லை.

இங்­குள்ள மக்கள் தமது பிள்­ளை­களை இடுப்பில் வைத்துக் கொண்டே தொலைக்­கட்­சியில் சின்­னத்­திரை (டெலி­டி­ராமா) நாடகம் பார்ப்ப­தையே வழ­மை­யாகக் கொண்­டுள்­ளார்கள். இடுப்­பி­லி­ருந்து கொண்டே அவர்­க­ளது பிள்­ளையும் படிக்­கி­றது. இந்­நிலை மாற வேண்டும்.

பெற்றோர் பிள்­ளை­க­ளுக்கு சிறந்த கல்­வியை வழங்க வேண்டும். அவர்கள் படிப்­ப­தற்­கான சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும். கொழும்­பி­லி­ருந்து டாக்­டர்­களும் பொறி­யி­ய­லா­ளர்­களும் உரு­வாக வேண்டும்.

கிரா­மங்­க­ளி­லி­ருந்து டாக்­டர்­களும் பொறி­யி­ய­லா­ளர்­களும் உரு­வாக முடி­யு­மென்றால் ஏன்  கொழும்­பி­லி­ருந்து உரு­வாக முடி­யாது.

கொழும்­பி­லுள்ள பிள்­ளைகள் ஒழுங்­காகப் படிக்­கா­த­தி­னா­லேயே முச்­சக்­கர வண்டி ஓட்­டு­னர்­க­ளா­கவும் நடை­பாதை வியா­பா­ரி­க­ளா­கவும் வாழ்க்­கையை நடத்­து­கி­றார்கள். இந்­நிலை மாற வேண்டும். இதற்­காக இப்­ப­குதி மக்கள் தம­து­பிள்­ளை­களின் கல்­வியில் ஆர்வம் செலுத்த வேண்டும்.

இன்று உலக நாடுகள் அனைத்தும் இலங்­கைக்கு உத­வு­வ­தற்கு முன்­வந்­துள்­ளன. எமது வெளிநாட்டுக் கொள்கைகளே உலக நாடுகள் எம்மை ஆதரிப்பதற்கு காரணமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் இறைமையை உலக நாடுகளுக்கு தாரை வார்ப்பதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். ஜனாதிபதி ஒரு போதும் அவ்வாறு செயற்படமாட்டார் என்றார்.