புகையிரதத்தில் ஒருவர் மோதுண்டு மரணம்!

அஸாஹிம் 

வாழைச்சேனை புகையிர நிலையத்திற்கும் ஓட்டமாவடி பாலத்திற்கும் இடையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ‘உதேதேவி’ புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் இன்று (27.09.2016) இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

5_fotor

இன்று (27.09.2016) காலை மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி காலை 06.10 மணிக்கு புறப்பட்ட ‘உதேதேவி’ புகையிரதத்தில் ஓட்டமாவடி பாலத்திற்கும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கும் இடையில் வைத்து 07.10 மணியளவில் ஒருவர் மோதுண்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மதியம் 12.00 மணியளவில் உயிர் இழந்துள்ளார்.

4_fotor

உயிர் இழந்தவர் ஓட்டமாவடி ஹனீபா மாஸ்டர் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அலியார் சேகு இப்றாஹிம் (வயது – 45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.