மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு!

க.கிஷாந்தன்

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை வரை எரிபொருள் தாங்கி ஏற்றிச் சென்ற புகையிரதம் 27.09.2016 அன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தடம் புரண்டுள்ளது.

img_0950_fotor

இதன் காரணமாக 27.09.2016 அன்று காலை முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை ரயில் நிலைய பகுதியில் உள்ள கொட்டகலை எரிபொருள் மத்திய நிலையத்திற்கு எரிபொருள் இறக்கும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

vlcsnap-2016-09-27-06h33m42s48_fotor

புகையிரதத்தில் 3 எரிபொருள் தாங்கிகள் இருந்த வேளையில் ஒரு என்ஜீன் உட்பட ஒரு எரிபொருள் தாங்கியும் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், புகையிரத பாதையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.