புலிகளை நினைவுகூருவதற்கு நீதிமன்றம் தடை !

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான எந்தவொரு நினைவு தினத்தையும் அனுஷ்டிப்பதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு இவ்வாறு நினைவு தினம் அனுஷ்டிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இது குறித்து நீதிமன்றத்துக்கு பொலிஸார் அறிவித்ததையடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.