மஹிந்தவின் கட்சிக்கான பெயரை தெரிவு செய்யும் பொறுப்பு ஜோதிடர்கள் அடங்கிய சபையிடம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் ஆரம்பிக்க உள்ள புதிய அரசியல் கட்சிக்கான பெயரை தெரிவு செய்யும் நடவடிக்கை ஜோதிட பிரச்சினை காரணமாக தாமதமாகி வருவதாக தெரியவந்துள்ளது.

mahinda-rajapaksa

எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என பெயரிட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த பெயரின் கன பொருத்தத்தில் பிரச்சினைகள் இருப்பதாக இலங்கை ஜோதிடர்கள் மாத்திரமல்லாது இந்திய ஜோதிடர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். இதனையடுத்து எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்ற பெயரை சூட்டுவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து மகிந்த ராஜபக்சவின் ஜாதக யோகங்களுக்கு பொருத்தமான வகையில் சிறப்பான பெயர் ஒன்றை தெரிவு செய்யும் பொறுப்பு ஜோதிடர்கள் அடங்கிய சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தெரிவு செய்யும் பெயரை இந்திய ஜோதிடர் ஒருவரிடம் காண்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜோதிட பலன்களுக்கு அமைய சுப நேரத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.