இந்த வழக்கில் நான் குற்றமற்றவனே : துமிந்த சில்வா

எந்தவொரு குற்றச் செயலுடனும் தாம் தொடர்புபடவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

images

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் துமிந்த உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக  கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதித்த நீதிபதிகள் துமிந்தவிடம் மரண தண்டனை விதிக்க முன்னதாக எதனையும் கூற விரும்புகின்றீர்களா என கேட்ட போது, துமிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதுவும் நினைவில் இல்லை எனவும், தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கூட ஏனையவர்கள் கூறியபோதே தமக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தாம் குற்றமற்றவர் எனவும், இந்தக் குற்றச் செயல்களுடன் தாம் தொடர்புபடவில்லை எனவும் கூறிய அவர் தம்மை விடுதலை செய்யுமாறும் கோரியுள்ளார்.