மரக்கறிக்கு நீர் பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து ஆணொருவர் மரணம்!

க.கிஷாந்தன்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் மரக்கறிக்கு நீர்பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து 43 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் 07.09.2016 அன்று பகல் 1.00 மணியளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

photo (1)

உயிரிழந்தவர் வீரய்யா செல்வமணி என பொலிஸார் தெரிவித்தனர். இவர் 07.09.2016 அன்று காலையில் தோட்ட வேளைக்கு சென்று பகல் வரை வீட்டுக்கு வராமல் இருந்ததால் பகலுணவிற்காக இவரை தேடிச்சென்ற வேளையிலேயே கிணற்றில் விழுந்து கிடந்ததை கண்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து பிரசேவாசிகளால் அவரை மீட்டெடுத்த போதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

photo (2)

மேற்படி நபர் வலிப்பு நோயால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவரின் பிரேதவுடல் வைத்தியப் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.