ரயில் தடம்புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

க.கிஷாந்தன்

 

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

DSC08310_Fotor

ரயிலின் பயணிகள் பெட்டி ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

 

கொட்டகலை – அட்டன் ஆகிய புகையிரத நிலையத்திற்கிடையில் 110 என்ற கட்டைப்பகுதியில் 05.09.2016 அன்று 1.45 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயணிகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

DSC08317_Fotor

ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் என நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.

DSC08322_Fotor