முஸ்லீம் சமூகமே ! இன்னும் நீ ஏமாறத்தான் போகிறாயா? உனக்கு சூடு சொரணை இல்லையா?

சாக்கடையில் முளைத்த தகரக் கன்றுகள் 
வளர்ப்பும் வரலாறும் தெரியாமல்,
சாராய வெறியால் சலசலப்பதை பார்த்து
சமுதாய வளர்ச்சிக்காக்கவும் அதன் உயர்ச்சிக்காகவும்
உயிர் தியாகம் செய்த காங்கிரஸ் தொண்டர்களும் தியாகிகளும்
கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.


சாராய வெறியர்களெல்லாம்
தட்டுத் தடுமாறி தலைவர்களாக வந்து விட்ட
கேவலத்துக்கு யார் பொறுப்பு ?
காற்றுக்கு ஆடி கலகலக்கும் தகரக் கொத்துகளே..!
நீங்கள் சோற்றுக்கு போட்ட தாளங்கள் யாருக்கு தெரியாது.
மக்களின் சொத்தில் தாருல் ஸலாத்தை
கட்டிக் காத்த தலைவர் அஷ்ரப் கட்சிக்கு எழுதிய உறுதியை
அழித்து எளிதிப் பதிந்த அப்பன் சாமிகள் யார்?


இரவும் பகலும் விலை மாதர்களின் கச்சைக்குள்
கனியும் காவாலிப் பயல்களே !
இஸ்லாத்தை ஏமாற்றி முஸ்லிம்களை
பலிகொடுக்கும் பாவிகளே !


அல்லாஹ்வின் சாபம்
உங்களை அளிக்காமல் விடாது.
சமூகத்தை விற்று சாக்குகளை நிரப்பும்
சண்டாளர்களே! என்றோ ஒருநாள்
நீங்கள் அழிவது திண்ணம்.
முன்னுக்கு பின் முரணாக பேசும்
முகமூடித் தலைவனே !


உன் முகத் திரையை கிழித்து எறிவதற்கு
மக்கள் காங்கிரஸ் தலைவன் றிசாட் வந்து விட்டான்.!
உன்னையும் உன் கட்சியையும் கொத்திக் கிழிக்க
மயிலாக பறந்து வருவதை பார்…!
முஸ்லீம் சமூகமே…! இன்னும் நீ ஏமாறத்தான் போகிறாயா?
உனக்கு சூடு சொரணை இல்லையா?

 

எஸ். முத்துமீரான்