பொதுத் தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்கம் அமை­வதை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம்!

பொதுத் தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்கம் அமை­வதை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். கூட்டு அர­சாங்­கத்­துக்கு இனி அவ­சியம் இல்லை. எனவே, பிர­தான தனிக் கட்­சியே ஆட்­சி­ய­மைக்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார்.

எமது பிர­தான எதிரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆவார். அவரை ஒன்­றி­ணைத்து எதிர்­கால அர­சி­யலை மேற்­கொள்ள முடி­யாது. இந்த பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியை வீழ்த்­து­வதே எமது நோக்­க­மெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.

பொதுத் தேர்­தலின் பின்னர் மீண்டும் தேசிய அர­சாங்கம் அமை­வ­தற்­கான சாத்­தியம் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்த தேசிய அர­சாங்­கத்­தி­னூ­டாக அவ­சி­ய­மான அர­சியல் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்த முடிந்­தமை உண்­மை­யாகும். அதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்றப் படு­வ­தற்கு தேசிய அர­சாங்கம் கைகொ­டுத்­தது. அதேபோல் 20ஆவது திருத்தச் சட்­டத்­தையும் இந்த அர­சி­னூ­டாக நிறை­வேற்றி அதன்­பின்னர் பொதுத் தேர்­த­லுக்கு செல்­ல­வேண்டும்.

இது­வ­ரைக்கும் தேசிய அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்பு அவ­சி­யமே தவிர தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்­ல­வேண்­டிய அவ­சியம் இல்லை. பொதுத் தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் அமை­வதை நாம் விரும்­ப­வில்லை. அனு­ம­திக்­கப்­போ­வதும் இல்லை. எனவே அடுத்த அர­சாங்கம் தனிக் கட்­சியின் அர­சாங்­க­மா­கவே அமைய வேண்டும்.
பிர­தான இரு கட்­சி­களில் ஒரு கட்சி ஆட்­சியில் இருக்க வேண்டும். ஆனால் அது மக்­களின் ஆத­ரவை பெற்ற கட்­சி­யாக இருக்க வேண்டும். இது­வரை நாட்­களும் தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆதிக்கம் அதி­க­ரித்­தி­ருந்­தது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியே இன்று நடக்­கின்­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க மக்­களின் ஆத­ரவை பெறாது பிர­த­ம­ராக செயற்­ப­டு­கின்றார். இது முர­ணான விட­ய­மாக இருந்­தாலும் நாம் இப்­போது இந்த விட­யங்­களை விமர்­சிப்­பது அவ­சி­ய­மற்­றது. வெகு விரைவில் பொதுத் தேர்தல் நடை­பெ­ற­வி­ருப்­ப­தனால் தேர்­தலில் பல­மான கட்­சி­யாக போட்­டி­யிட்டு ஆட்­சியை ஜன­நா­யக ரீதியில் கைப்­பற்­று­வதே எமது இலக்­காக்கும்.

அதற்­கான வேலைத் திட்­டங்­களை நாங்கள் ஆரம்­பித்­துள்ளோம். அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே எமது பிர­தான எதி­ரி­யா­வார்கள். அவர்­களை வீழ்த்தி பல­மான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும். மீண்டும் நாட்டில் எமது அர­சாங்கம் உரு­வாக வேண்டும்.அவ்­வா­றா­ன­தொரு போராட்­டத்தில் ரணிலை இணைத்து தேசிய அர­சாங்­கத்தை மீண்டும் உரு­வாக்­கு­வதை நாம் விரும்­ப­மாட்டோம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எமது கட்­சியின் தலைவர், ஆனால் தேசிய அர­சாங்­கத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இணைந்­துள்ளார்.
எனவே இந்த அர­சாங்கம் தற்­கா­லி­க­மா­னது மட்­டுமே. அதேபோல் நாம் அரசாங்கத்தில் பங்குதாரராக இருந்தாலும் எதிர்க்கட்சியாகவே செயற்படுகின்றோம். எனவே பொதுத் தேர்தல் வரையிலேயே இவை அனைத்தும் நிலைத்திருக்கும். தேர்தலின் பின்னர் ஜனாதிபதி, பிரதமரை உள்ளடக்கிய எமது அரசாங்கத்தை அமைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags