65ஆவது மாநாட்டுக்கு பின்னர் ராஜபக்சக்கள் கைது ? : சஷிந்திர ராஜபக்ச தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டுக்கு பின்னர் ராஜபக்சக்கள் கைது செய்யப்படலாம் என ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

shashindra-rajapaksa

எனவே, மாநாட்டிற்கு செல்வதை விட, பொலிஸ் நிதி மோசடி பிரிவுக்கு வந்து செல்வது சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு நேற்று  வருகை தந்த அவர் ஊடகங்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கூறிய அவர், கடந்த மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் பலரை சிறையில் அடைத்தனர்.

அத்துடன், பாதயாத்திரையில் கலந்துகொண்டதற்காகவும் சிலரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுதந்திர கட்சியின் மாநாட்டிற்கு பின்னர் எத்தனை பேரை சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது தெரியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.