நிச்சயமாக புதிய சின்னத்தின் கீழ் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளோம் : பசில்

புதிய சின்னத்தில் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச  நேற்று  தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைகளுக்காக நேற்று  மேல்நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நிச்சயமாக புதிய சின்னத்தின் கீழ் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் தாம் ஒரு போதும் அதில் பங்கேற்க போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.