புதிய அரசியலமைப்பு நகலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் :மங்கள

mangala-samaraweera_650x400_41435145071

அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நகலை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

எமது நாட்டின் பண்முகத் தன்மையை சிறப்பிக்கும் வகையில் அது அமைந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ் பருத்தித்துறை பகுதியில் வைத்தே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

மேலும் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் மாத நடுப்பகுதியில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.