கடத்தப்பட்ட வர்த்தகர் சாகிப் சுலைமான் எரியூட்டப்பட்ட நிலையில் ஜனாஷாவாக மீட்பு

 இரண்டு தினங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி நகரில் வைத்து இனம் தெரியாத சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹம்மட் சாகிப் சுலைமான் (வயது 29) அவர்கள் எரியூட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக எமது இணையத்தளத்திற்கு அவரது உறவினர் தொலைபேசியூடாக lakafrontnews.com இணையத்தளத்திற்கு  தெரிவித்தார்.

Screen Shot 2016-08-24 at 21.55.44

இவருடைய ஜனாஷா மாவனல்லை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சுலைமான் அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளை உள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார் .

இவருடைய கொலை தொடர்பாக பொலிசார் விரிவான விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் மேலும் அறியக் கிடைக்கின்றது.