பிள்ளையானுக்கு அடுத்த மாதம் 07ம் திகதி வரை விளக்கமறியல்

file image
file image
                                                                     file image

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
அடுத்த மாதம் 07ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.