காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் ஒப்பம் !!

Karu-Jayasuriya-620x330

காணாமல் போனோர்  அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். 

இன்று செவ்வாய்க்கிழமை  காலை குறித்த சட்டமூலம் மற்றும் நிதி முகாமைத்துவ பொறுப்புத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். குறித்த மசோதாவுக்கு கூட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்த போதும், சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார்.