கெயில், கோலி அதிரடி மற்றும் வார்னரின் உதவியுடன் பெங்களூர் அணி வெற்றி !

213341

 

கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் தொடங்க இருந்த ஆட்டம் மழை காரணமாக, போட்டியானது 11 ஒவர் ஆட்டமாக குறைக்கப்பட்டு 10.40 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற  ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

தொடக்க ஆட்டகாரர்களாக வார்னரும், தவானும் களமிறங்கினார்கள். மிகவும் எதிர்பாக்கப்பட்ட தவான் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து களமிறங்கிய மோசஸ் ஹென்ரிக்ஸ் வார்னருடன் சேர்ந்து பெங்களூர் பந்து வீச்சை சிதறடித்தார்கள். முக்கியமாக மோசஸ் ஹென்ரிக்ஸ் ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில் அந்த அணி 11 ஒவரில் 135 ரன்கள் குவித்தது. ஹென்ரிக்ஸ் 57 ரன்களும், வார்னர் 52 ரன்களும் எடுத்தனர்.

வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெங்களூர் அணி. இது வரை விளையாடிய 12 ஆட்டத்தில் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று இருக்கிறது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. இன்றைய ஆட்டம் பெங்களூர் அணிக்கு முக்கியமானது. இதில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு குறைந்துவிடும்.

ஆனால் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஒவர்கள் குறைக்கபட்டு, பெங்களூர் அணி 6 ஒவரில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது. கெயில் 10 பந்துகளில் 35 எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மறுமுனையில் யாறும் சரியாக ஆடாத நிலையில் கோலி மட்டும் தொடர்ந்து போராடியப்படியே இருந்தார். கடைசி இரு பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த ஒவரின் 5 பந்தை தூக்கி அடைதார். சிக்ஸ் போகும் என்று எதிர்பார்த்த நிலையில் எல்லை கோட்டு அருகே இருந்த வார்னர் அதை கேட்ச் பிடித்தார். ஆனால் எதிர்பாரத விதமாக கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் பவுண்டரி லையனை மிதித்துவிட்டார். இதானால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. பெங்களூர் வெற்றி பெற்றது. 44 ரன்கள் எடுத்த கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

உலகின் மிக சிறந்த பில்டர்களில் ஒருவரான வார்னர், அதீதித மகிழ்ச்சியால் செய்த தவறால் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது ஐதராபாத் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

213343.3